TAMIL CINEMA NEWS

ரஜினியுடன் மோதத் தயாராகும் கமல்

காசோலை மோசடி வழக்கில் ராதிகா, சரத்குமார் ஆகியோருக்கு சிறைத்தண்டனை

காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா ஆகியோருக்கு சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. 7 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சரத்குமாருக்கு தலா ஓராண்டும், 2 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராதிகாவுக்கு தலா ஓராண்டும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேன்முறையீடு செய்வதற்காக, சரத்குமாரின் சிறைத் தண்டனையை நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்துமார், அவரது மனைவி ராதிகா மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில், கடந்த 2014ஆம் ஆண்டு, ‘ரேடியன்ஸ் மீடியா’ நிறுவனத்திடம் இருந்து ரூ.1.5 கோடியை காசோலை மூலமாகவும், ரூ.50 லட்சத்தை ரொக்கமாகவும் கடனாகப் பெற்றுள்ளனர். இதற்காக சரத்குமார் தரப்பில் 7 காசோலைகள் வழங்கப்பட்டன. இந்தக் காசோலைகளை வங்கியில் செலுத்தியபோது, கணக்கில் பணம் இல்லை என திரும்பி வந்தது. இதையடுத்து, சரத்குமார் மற்றும் ராதிகா ஆகியோருக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கு, சென்னையில் உள்ள எம்.பி.மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. மொத்தம் 7 வழக்குகளில் சரத்குமார் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டார். 2 வழக்குகளில் ராதிகா மற்றும் ஸ்டீபன் ஆகியோரும் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டனர். தாங்கள் மோசடி செய்ய நினைக்கவில்லை. வட்டி அதிகமாகக் கேட்டதால் பணத்தை உடனே திரும்பச் செலுத்த முடியவில்லை என்று வாதிடப்பட்டது. ஆனால் காசோலை மோசடி செய்யப்பட்டுள்ளது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டதாக மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. மூன்று பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த நீதிமன்றம், 7 வழக்குகளில் எதிர் மனுதாரராக இருக்கும் சரத்குமாருக்கு தலா ஒரு வருடமும், ராதிகா மற்றும் ஸ்டீபனுக்கு 2 வழக்குகளில் தலா ஒரு வருடமும் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்நிலையில் மேன்முறையீடு செய்யும் வரை, தங்களது தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மூவர் தரப்பிலும் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், சரத்குமார், ஸ்டீபன் ஆகியோரின் சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. விசாரணைக்கு ஆஜராகாத ராதிகாவுக்கு பிடிவிறாந்து பிறப்பித்து உத்தரவிடப்பட்டது. கொரோனா பாதித்ததால், விசாரணைக்கு ஆஜராகவில்லை என ராதிகா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

Reported by : Sisil.L

ரசிகரிடம் இருந்து செல்போனை பிடுங்கிய விவகாரம்; மன்னிப்பு கேட்டார் அஜித்

செல்பி எடுத்த ரசிகரின் செல்போனை பிடுங்கிய அஜித், அவரிடம் மன்னிப்பு கேட்டார். தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு நடிகர் அஜித் இன்று காலையிலேயே திருவான்மியூரில் வாக்களித்தார்

தனது வீட்டின் அருகில் உள்ள வாக்குச்சாவடியில் மனைவி ஷாலினியுடன் வந்து வாக்களித்தார் நடிகர் அஜித். முகக் கவசம் அணிந்து வந்த அஜித்துடன் செல்பி எடுக்க ரசிகர்கள் முண்டியடித்தனர். அப்போது, ரசிகர் ஒருவர்  அஜித்துக்கு மிக நெருக்கமாக வந்து செல்பி எடுத்தார். இதனால் கடுப்பான அஜித் அவரது செல்போனை பிடுங்கினார்.

மேலும் வாக்குச்சாடிக்குள் செல்போனுக்கு அனுமதியில்லை, செல்போனை பயன்படுத்தாதீர்கள் என அறிவுரை கூறினார். அஜித் ரசிகரிடமிருந்து செல்போனை பிடுங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.இந்நிலையில் நடிகர் அஜித், போனை பிடுங்கிய ரசிகரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

சாரி சாரி என்று அஜித் அந்த ரசிகரிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.வாக்குச்சாவடிக்குள் போனை கொண்டு வந்து போட்டோ எடுக்க முயன்ற ரசிகருக்கும் அறிவுரை வழங்கிய அஜித் அவரிடம் வாக்குச்சாவடிக்குள் செல்போன்கள் அனுமதியில்லை. அதனால் போட்டோ எடுக்காதீர்கள் என்று அட்வைஸ் கூறினார்.

இதனைத் தொடர்ந்து #அஜித் என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட்டாகி வருகிறது. அஜித் வாக்களித்தது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

Reported by : Sisil.L

கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமாகும் வீரப்பனின் மகள்

தமிழக அதிரடிப் படையால் 2004இல் சுட்டுக்கொல்லப்பட்ட சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு வித்யாராணி, விஜயலட்சுமி என்று 2 மகள்கள் உள்ளனர். இதில் வித்யாராணி கடந்த வருடம் பா.ஜனதா கட்சியில் இணைந்தார். இளைய மகளான விஜயலட்சுமி சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி இருக்கிறார்.

விஜயலட்சுமி நடிக்கும் படத்துக்கு ‘மாவீரன் பிள்ளை’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தை இயக்கியுள்ள கே.என்.ஆர்.ராஜா,  கதாநாயகனாகவும் நடித்துள்ளார். விஜயலட்சுமி தோற்றம் அடங்கிய பெர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் கையில் துப்பாக்கியுடன் போஸ் கொடுத்தபடி நிற்கிறார் விஜயலட்சுமி.

மது ஒழிப்பு மற்றும் தண்ணீர், விவசாயிகள் பிரச்சினை பற்றிய போராட்டங்களை மையப்படுத்தி இந்தப் படம் தயாராகி உள்ளது. போராட்டங்களை முன்னன்று நடத்தும் போராளி கதாபாத்திரத்தில் விஜயலட்சுமி நடித்திருக்கிறார். வீரப்பனின் மகள் நடிப்பதால் இப்படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது

இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனை செய்தவர்களுக்கு ஆண்டு தோறும் மத்திய அரசால் ‘தாதா சாகேப் பால்கே’ விருது வழங்கப்படுகிறது.

இந்த விருது இந்திய திரைப்படத்துறையின் தந்தை என்று கருதப்படும் தாதா சாகேப் பால்கே பெயரால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1969ஆம் ஆண்டு அவரது பிறந்த நாள் நூற்றாண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்திய திரைத்துறையில் சாதனை செய்தவர்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் மிக உயரிய விருதாக இந்த விருது கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டு இறுதியில்

தேசிய விருதுகள் வழங்கப்படும் போது இந்த விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருது தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்த பல்வேறு திரைப் பிரபலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குனர் சிகரம் என்று அழைக்கப்பட்ட இயக்குனர் பாலச்சந்தர் ஆகிய 2 பேர் மட்டுமே இந்த விருதைப் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் 2020-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதை நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்குவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

ரஜினிகாந்துக்கு 2020ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய சினிமாவில் மிகச்சிறந்த நடிகர்களில் ரஜினியும் ஒருவர். நடிகராகவும், தயாரிப்பாளராகவும், திரை எழுத்தாளராகவும் அவரது பங்களிப்பை பாராட்டி இந்த விருது வழங்கப்படுகிறது.

இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தமிழகத்திலிருந்து இந்த உயரிய விருதைப் பெறும் 2ஆவது நடிகர் என்ற பெருமையை ரஜினிகாந்த் பெற்றுள்ளார்.

திரைத்துறையில் இந்திய அளவில் சாதனை புரிந்த நபர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் ஆங்கில மொழி படங்களில் நடித்துள்ளார். வங்க மொழி படத்திலும் ரஜினிகாந்த் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதிக்காக கதை தயார் செய்திருக்கும் ராமராஜன்

80களில் முன்னணி நடிகராக வலம் வந்த ராமராஜன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனராக களமிறங்க இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் ஜொலித்த ராமராஜன் தற்போது பல வருட இடைவெளிக்குப் பின், மீண்டும் படம் இயக்க உள்ளதாக அண்மைய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: “நான் கதாநாயகனாக 44 படங்களில் நடித்திருக்கிறேன். 5 படங்களை இயக்கி உள்ளேன். இந்த 49 படங்களும் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் கதையம்சம் கொண்டதாகவே இருந்தன. நான் இயக்க இருக்கும் புதிய படமும் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் கதையம்சம் கொண்டதாகவே இருக்கும்.

எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும், பெண்களுக்கு எதிராக படம் எடுக்க மாட்டேன். அதுபோல் நான் கடைசி வரை ஜெயலலிதாவின் தொண்டனாகவே இருப்பேன். தற்போது நான் தயார் செய்து கொண்டிருக்கும் கதை விஜய்சேதுபதிக்கு பொருத்தமாக இருக்கும். மேலும் சில கதைகளும் என்னிடம் உள்ளன” என ராமராஜன் தெரிவித்துள்ளார்

Reported by : Sisil.L

சாய் பல்லவி நடிக்க மறுத்த வேடத்தில் ஒப்பந்தமான நித்யா மேனன்

மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்’. சாஷி இயக்கிய இந்தப் படத்தில் அய்யப்பனாக பிஜூமேனனும், கோஷியாக பிருத்விராஜும் நடித்திருந்தனர். இரண்டு அதிகாரிகளின் இடையில் ஏற்படும் ஈகோ மோதலை யதார்த்தமாக எடுத்துக் காட்டியது இந்தத் திரைப்படம். இதனால் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

இந்தப் படத்தை தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்ய முயற்சி செய்யப்பட்டு வருகிறது. தமிழில் இந்தப் படத்தை ரீமேக் செய்ய, தயாரிப்பாளர் ஆடுகளம் கதிரேசன் உரிமையை வாங்கி வைத்திருக்கிறார். அதே போல் தெலுங்கு ரீமேக்கிற்கான உரிமையை, தயாரிப்பாளர் சூர்யதேவர நாகவம்சி வாங்கியுள்ளார்.

இந்தப் படத்தில் பிஜூமேனன் நடித்த அய்யப்பன் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிக்க உள்ளார். பிருத்விராஜ் கதாபாத்திரத்தில் ராணா நடிக்க உள்ளார். இதில் ராணாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

அதேபோல் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். அவர் நடிக்க மறுத்ததால் தற்போது நித்யா மேனனை ஒப்பந்தம் செய்துள்ளனர். நடிகை நித்யா மேனன், பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

 Reported by : Sisil.L 26-03-2021

பண்டாரத்தி புராணம்’ பாடல் சர்ச்சை - இயக்குனர் மாரி செல்வராஜ் எடுத்த அதிரடி முடிவு

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’. இப்படம் வருகிற ஏப்ரல் 9ஆம் திகதி வெளியாக இருக்கும் நிலையில், இந்தப் படத்தில் இடம்பெறும் ‘பண்டாரத்தி புராணம்’ என்ற பாடல் குறிப்பிட்ட சமூகத்தினரை காயப்படுத்தும் விதமாக உள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதனால் படத்தை வெளியிட தடைகோரி மதுரை உயர் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், இந்தப் பாடல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இயக்குனர் மாரி செல்வராஜ் அதிரடி முடிவொன்றை எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “பண்டாரத்தி புராணம்‌ பாடலுக்கு ஏற்பட்டிருக்கும்‌ விவாதத்தையும்‌ வருத்தத்தையும்‌ கோரிக்கையையும்‌ முடித்து வைப்பதற்காக இனி பண்டாரத்தியை மஞ்சனத்தி என்று அழைக்கலாம்‌ என்று முடிவு செய்திருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

 Reported by : Sisil.L  25-03-2021

அசுரனுக்கு கிடைத்த விருதை பாலுமகேந்திராவுக்கு சமர்ப்பிக்கிறேன்: இயக்குநர் வெற்றிமாறன்

தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் அசுரன். இது சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது. இதில் நடித்த தனுஷுக்கு, சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இயக்குனர் வெற்றி மாறனுக்கு ஆளுயர மாலை அணிவித்து தயாரிப்பாளர் தாணு வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் தேசிய விருது கிடைத்தது பற்றி வெற்றிமாறன் கூறியதாவது:

அசுரனுக்கு தேசிய விருது கிடைத்தது பெரிய ஊக்கமாக இருக்கிறது. என்னைப் போன்ற இயக்குனர்களுக்கு இது போன்ற விருதுகள் எப்போதுமே ஊக்கத்தைக் கொடுக்கும். எப்போதுமே விருதுகளுக்காக படம் இயக்குவதில்லை. அந்தக் கதைக்கு உண்மையாக இருக்க வேண்டும் என நினைத்து இயக்குவேன். நான் எந்த விருது வாங்கினாலும் பாலுமகேந்திராவுக்குத்தான் சமர்ப்பிப்பேன். இந்த விருதையும் அவருக்கே சமர்ப்பிக்கிறேன்.அசுரன் சமூக நீதிக்கான கதை, அது மக்களிடையே போய் சேர வேண்டும் என்பது தான் என்னுடைய முதல் எண்ணமாக இருந்தது. விருதுகள், தேசிய அளவிலான அங்கீகாரம், வணிக ரீதியான வெற்றி உள்ளிட்டவை இந்த மாதிரியான படத்துக்கு மிகவும் முக்கியமானவை.சிறந்த நடிகருக்கான தேசிய விருதை தனுஷ் வென்றிருப்பது மகிழ்ச்சி. 35 வயது நடிகர், 50 வயது கதாபாத்திரத்தில் நடிப்பது என்பது தனுஷ் மாதிரியான நடிகரால் மட்டுமே முடியும். அதை அவர் மிகவும் இலகுவாக நடித்தது, ரொம்பவே ஸ்பெஷலான விஷயம். அப்படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. இவ்வாறு வெற்றிமாறன் கூறியுள்ளார்.

 Reported by : Sisil.L  24-03-2021

கதாநாயகனா களமிறங்கும் பிரபல காமெடி நடிகர்

சந்தானம், வடிவேலு, யோகி பாபு, சூரி ஆகியோரைத் தொடர்ந்து இப்போது பிரபல காமெடி நடிகர் சதீஷ் கதாநாயகனாக களம் இறங்குகிறார்.

சிவகார்த்திகேயன், விஜய், தனுஷ், விஜய் சேதுபதி என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் தனது தனித்துவமான காமெடியின் மூலம் அனைவரையும் ரசிக்க வைத்தவர்.

இதுவரை குணச்சித்திர வேடங்களிலும் காமெடியனாகவும் நடித்து வந்தவருக்கு தற்பொழுது ஹீரோ ஆசை வந்துவிட அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் அதை பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தற்போதுள்ள தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சதீஷ், ஜித்தன் ரமேஷ் நடித்த ஜெர்ரி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். பல்வேறு மேடை நாடகங்கள் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் தற்போது சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடியனாக உள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் உடன் தொடர்ந்து பல படங்களில் பணியாற்றியுள்ள இவர்கள் இணைந்தாலே அந்தப் படம் சூப்பர் ஹிட் என்று சொல்லும் அளவிற்கு

மாறிப்போக முதல்முறையாக எதிர்நீச்சல் படத்தில் இந்தக் கூட்டணி உருவானது. எதிர்நீச்சல் சிவகார்த்திகேயனுக்கு மட்டுமல்லாமல் சதீஷுக்கும் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி பலருக்கும் இவரை அறிமுகப்படுத்தியது.

இவரை எண்ணற்ற திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தனித்துவமான கவுண்ட்டர்கள் மூலம் அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருந்த சதீஷுக்கு இப்பொழுது ஹீரோவாக நடிக்கும் ஆசையும் வந்துவிட்டது. ஏற்கனவே வடிவேலு, சந்தானம்,யோகி பாபு,சூரி என பலரும் காமெடி நடிகர்களாக இருந்து இப்பொழுது ஹீரோக்களாக பல படங்களில் நடித்திருக்க அந்த வரிசையில் நடிகர் சதீஷும் தற்பொழுது இணைந்துள்ளார்.

பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் சதீஷ் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மற்றுமொரு படத்திலும் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் அதுவும் ஹீரோவாக சதீஷ் நடிக்கவிருக்கும் விஷயத்தை அறிந்த ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்து போயுள்ளனர்.

 Reported by : Sisil.L  23-03-2021

ஜெயலலிதா வேடத்துக்காக சவால்களை எதிர்கொண்டேன்: நடிகை கங்கனா

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். இப்படம் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.

 ‘தலைவி’ படம் வரும் ஏப்ரல் 23 ஆம் திகதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், தலைவி படத்துக்காக தான் எதிர்கொண்ட சவால்கள் குறித்து கங்கனா தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது: “தலைவி படத்தின் டிரெய்லர் வெளியீட்டுக்கு இன்னும் ஒரு நாள்தான் உள்ளது. இந்த பயோபிக்கை படமாக்கும் போது நான் எதிர் கொண்ட ஒரே சவால், 20 கிலோ எடை கூடியதும், பின் சில மாதங்களில் எடை குறைத்ததும் தான்” எனக் குறிப்பிட்டு படத்தின் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

 Reported by : Sisil.L 22-03-2021

விஜய் சேதுபதி படத்துக்கு அபராதம்;அதிகாரிகள் அதிரடி

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் முகக் கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத நிறுவனங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி திண்டுக்கல் மாநகராட்சி நகர்நல அலுவலர் லட்சியவர்ணா தலைமையிலான சுகாதார ஆய்வாளர்கள் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது பஸ்நிலையத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு நின்றனர்.உடனே அதிகாரிகள் அங்கு சென்று பார்த்த போது அங்கு நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய சினிமா படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனால் ரசிகர்கள் உள்பட ஏராளமானோர் அங்கு குவிந்திருப்பது தெரியவந்தது.

மேலும் அதில் பலர் முகக் கவசம் அணியவில்லை. இதுமட்டுமின்றி சமூக இடைவெளியை மறந்து அனைவரும் நெருக்கமாக நின்று சினிமா படப்பிடிப்பை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இதனால் கொரோனா பரவும் வகையில் கூட்டம் கூடுவதற்கு காரணமாக இருந்ததாக, சினிமா படக்குழுவினருக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூபா 5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

ராம்சரண் தயாரிக்கும் படத்தில் விஜய் சேதுபதி?

தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் கைவசம் கடைசி விவசாயி, நவரசா, மாமனிதன், லாபம், துக்ளக் தர்பார், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்கள் உள்ளன. இவர் தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

அண்மையில், தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான உப்பென்னா திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அப்படம் 100 கோடி ரூபாவுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதனால் இவருக்கு தெலுங்குப் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம்.இந்நிலையில், மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘டிரைவிங் லைசன்ஸ்’ படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை நடிகர் ராம்சரண் கைப்பற்றியுள்ளார். இதில் பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் ரவிதேஜா நடிக்க உள்ளாராம். மேலும் அப்படத்தில் இடம்பெறும் பொலிஸ் கதபாத்திரத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் தனுஷின் ‘கர்ணன்’ படத்துக்கு தடை கோரி வழக்கு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 9ஆம் திகதி வெளியிடப்பட உள்ளது.

இந்நிலையில், மதுரை சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த பிரபு என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கர்ணன் படத்துக்கு தடை விதிக்கக் கோரி பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

கர்ணன்’ படத்தில் இடம்பெறும் ‘பண்டாரத்தி புராணம்’ எனும் பாடல் குறிப்பிட்ட சமூகத்தினரை காயப்படுத்தும் விதமாக உள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் பண்டாரத்தி புராணம் பாடலை யூடியூப் சேனல் மற்றும் கர்ணன் படத்திலிருந்து நீக்கவும், அதுவரை படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு திரைப்பட தணிக்கைத்துறையின் மண்டல அலுவலர், கர்ணன் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, பாடலை வெளியிட்ட யூடியூப் சேனல் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இசைத்திறமையை வெளிப்படுத்தி இசைஞானியிடம் பாராட்டு பெற்ற நடிகர் விவேக்

கொரோனா காரணமாக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கின் போது தனது மனதுக்குப் பிடித்த இளையராஜா பாடல்களை பியானோவில் கற்றுக் கொண்டு, இசைஞானி இளையராஜாவிடமே பாராட்டு பெற்றிருக்கிறார் நடிகர் விவேக்.

இதை பற்றி விவேக் நெகிழ்ச்சியுடன் கூறியதாவது: “என் மகன் வாசித்த பியானோவில் இசைஞானியின் பாடல்களை வாசிக்கப் பழகினேன். அதில் எனக்கு மிகவும் பிடித்தமானது ‘உன்னால் முடியும் தம்பி’ திரைப்படத்திற்காக இசைஞானி இசை அமைத்த ‘இதழில் கதை எழுதும் நேரமிது…’ பாடல் ஆகும்.

ராஜா சாரை மரியாதை நிமித்தமாக அவரது புதிய ஸ்டுடியோவில் சமீபத்தில் சந்தித்தேன். அப்போது புத்தரின்  படம் ஒன்றை நினைவுப் பரிசாக அவருக்கு அளித்தேன். அவரிடம் உரையாடிய போது, உங்கள் இன்ஸ்பிரேஷனில் நான் பியானோ வாசிக்க கற்றுக்கொண்டேன் என்று கூறி நான் வாசித்த ‘இதழில் கதை எழுதும் நேரமிது…’ காணொளியைக் காண்பித்தேன். அதை பார்த்துவிட்டு அவர் பாராட்டினார்.இளையராஜாவுடனான உரையாடலின் போது நான் ஒரு பியானோ வாங்கி உள்ளதையும்,

அடுத்த சந்ததியினரும் நினைவு கூர வேண்டும் என்பதற்காக அவரது புகைப்படத்தையும் ஓட்டோகிராப்பையும் அதில் பதிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் கூறினேன்.

அதைக்கேட்ட இசைஞானியும், என்னுடைய வேண்டுகோளை நிறைவேற்றும் விதத்தில் தன்னுடைய புகைப்படத்தில் ‘இறையருள் நிறைக’ என்று எழுதி கையெழுத்திட்டு தந்துள்ளதாக” விவேக் கூறினார்.

‘அண்ணாத்த’ படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பம்

சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் அண்ணாத்த. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தபோது, படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பவியலாளர்கள் 4 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதால் படப்பிடிப்பை தற்காலிகமாக ரத்து செய்தனர். ரஜினி உட்பட படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பினர். இதையடுத்து இரண்டு மாதங்கள் படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில், தற்போது ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறதாம். ஒரு மாதம் சென்னையில் படப்பிடிப்பை நடத்த உள்ளார்களாம்.

அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, பிரகாஷ் ராஜ் என ஏராளமானோர் நடிக்கின்றனர். டி இமான் இசையமைக்கும் இப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் நடிக்காமல் இருந்ததற்கு மகளே காரணம் - கௌதமி

தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 90களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த கௌதமி தற்போது அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

”நான் சினிமாவுக்கு வருவேன் என்றோ அரசியலில் ஈடுபடுவேன் என்றோ நினைத்துப் பார்க்கவில்லை. ஆந்திராவில் பிறந்த நான் எம்.பி.ஏ படிக்க வேண்டும் என்ற ஆசையோடு இருந்தேன். ஆனால் குரு சிஷ்யன் படத்தில் நடித்த பிறகு திரும்பிப் பார்க்கவே நேரம் இல்லை. வருடத்துக்கு 15 படங்கள் வரை நடித்தேன். ஏழரை வருடங்களில் 120 படங்களில் நடித்து விட்டேன். அது பெரிய சாதனை.

சினிமாவால் வாழ்க்கையில் சில விஷயங்களை இழக்கிறோம் என்று தோன்றியது. அதன்பிறகு சினிமாவை விட்டு விலக முடிவு செய்தேன். திருமணம் ஆகி 3 ஆண்டுகளில் அந்த உறவு அறுந்து போனது. ஆனாலும் எனது வாழ்க்கையில் நான் தனிமையாக இல்லை. எனக்குள்ளேயே நான் இருக்கிறேன். எந்த விஷயம் ஆனாலும் எனது மகளிடம் மனம் விட்டுப் பேசுகிறேன்.

எனது கடந்த காலம், நிகழ்காலம் எல்லாம் அவளுக்குத் தெரியும். எனது மகள் சுப்புலட்சுமிக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் இல்லை. கமராவுக்குப் பின்னால் இருக்கத்தான் அவளுக்குப் பிடிக்கிறது. சினிமாவில் நடிக்க வேண்டும் என்றாலும் எனக்கு ஆட்சேபனை இல்லை. எல்லாம் அவளுடைய விருப்பம்தான். இத்தனை காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்ததற்கு எனது மகள்தான் காரணம். இப்போது அவள் செட்டிலாகி விட்டதால் இனிமேல் சினிமாவில் நடிக்க நான் தயாராக இருக்கிறேன் என்றார்.

புதுப்புது அர்த்தங்கள்’ புதிய தொடரில் நடிகை தேவயானி

 தமிழ் சினிமாவில், 90களில் உச்சத்தில் இருந்த நடிகைகளுள் ஒருவர் நடிகை தேவயானி. அப்போது அவரைப் பற்றி தெரியாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவிற்கு பிரபலமான ஒருவராக இருந்தார். தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களாக உள்ள விஜய், அஜித், சூர்யா போன்றோரின் முக்கிய படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த ‘சூர்யவம்சம்’ இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. குடும்பப் பாங்கான படங்கள் நடித்த தேவயானி, தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்திருந்தார். மற்றும் இவர் நடித்த பல படங்கள் வசூல் சாதனை செய்தன.

பல திரைப்படங்களில் நடித்து எண்ணெற்ற விருதுகளை வாங்கிக் குவித்த நடிகை தேவயானி. சின்னத்திரையிலும்  வலம் வந்தார். இவர் நடித்த கோலங்கள் சீரியல் பட்டிதொட்டியெல்லாம் பரவலாக பார்க்கப்பட்டது.

சுமார் 6 வருடங்களுக்கு மேல் ஓடிய அந்தத் தொடரில் மிக சிறப்பாக நடித்திருப்பார். இந்தத் தொடர் பற்றி அறியாத 90ஸ் கிட்ஸ் எவருமே இல்லை எனலாம். அந்த அளவிற்கு சின்னத்திரையில் ஹிட் அடித்த தொடராக இருந்தது.

இந்த நிலையில், 12 வருடங்கள் கழித்து மீண்டும் சின்னத்திரையில் தோன்ற உள்ளார் நடிகை தேவயானி. ஜீ- தமிழ் தொலைக்காட்சியில் மார்ச் 22 முதல் ஒளிபரப்பாக உள்ள ‘புதுப்புது அர்த்தங்கள்’ தொடரில் தான் நடிக்கிறார். இந்தத் தொடரில் குடும்பப் பொறுப்பை தாங்கும் ஒரு குடும்பத் தலைவியாக நடிக்கிறார். தற்போது இந்தத் தொடரின் புரோமோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

—————————–

லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக பிரபல பொலிவுட் நடிகை

லெஜண்ட் சரவணன் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை இரட்டை இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்குகின்றனர்.

தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் லெஜண்ட் சரவணன் அறிமுகமாகிறார். அவர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் படத்தை இரட்டை இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்குகின்றனர். இவர்கள் ஏற்கனவே உல்லாசம், விசில் போன்ற படங்களை இயக்கியுள்ளனர். மேலும் இந்தத் திரைப்படத்தில் பிரபு, விவேக், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பிரபல பொலிவுட் நடிகையான ஊர்வசி ரவ்துலா, லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு மணாலியில் நடைபெற்று வருகிறது. பிரபல இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ் இந்தத் திரைப்படத்துக்கு இசை அமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளைக் கவனிக்கிறார்.

வரலாற்றுக் கதை சொல்லி சூர்யாவை கவர்ந்த பிரபல இயக்குனர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, பிரபல இயக்குனர் சொன்ன வரலாற்று கதை பிடித்திருப்பதாகவும் விரைவில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.சூரரைப் போற்று திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இதையடுத்து வெற்றி மாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் பிரபல இயக்குனர் வசந்தபாலன், சூர்யாவிடம் கதை சொல்லி கவர்ந்திருக்கிறார். வசந்தபாலன் சொன்ன வரலாற்று கதை சூர்யாவிற்கு பிடித்திருப்பதாகவும், விரைவில் இருவரும் இணைவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இயக்குனர் வசந்தபாலன், ஆல்பம், வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத்தலைவன் ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார். தற்போது ஜி.வி.பிரகாஷை வைத்து ஜெயில் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மானுடன் கூட்டணி அமைக்கும் சங்கர்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஷங்கரின் ஜென்டில்மேன், காதலன், முதல்வன், பாய்ஸ், இந்தியன், ஜீன்ஸ், சிவாஜி, எந்திரன், ஐ, 2.0 போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக தென் கொரிய நடிகையான பேசூஜி நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்க உள்ளார்.

இந்நிலையில், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய ஏ.ஆர்.ரகுமானிடம், ரசிகர் ஒருவர் தெலுங்கு படத்திற்கு எப்போது இசை அமைக்கப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அவர், மிக விரைவில் தெலுங்கு படம் ஒன்றிற்கு இசையமைக்க உள்ளதாகக் கூறினார். இதன்மூலம் அவர் குறிப்பிட்ட அந்த தெலுங்குப் படம் ஷங்கரின் படமாகத் தான் இருக்கும் என்று கூறப்படுகிறது

‘மிருகா’ திரை விமர்சனம்

படத்தின் நாயகன் ஸ்ரீகாந்த், கணவரை இழந்த வசதியான பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்களிடம் இருந்து பணத்தைப் பறித்து வருகிறார். இதை ஒரு பெண் கண்டுபிடித்து ஸ்ரீகாந்த்தை மிரட்டுகிறார். இதற்குப் பயப்படும் ஸ்ரீகாந்த்திடம் என் அக்கா ராய் லட்சுமியை காதலித்து ஏமாற்றி பணத்தை கொள்ளையடிக்கும் படி கேட்கிறார்.

ஸ்ரீகாந்த்தும் இதை ஏற்று, ராய் லட்சுமி இருக்கும் இடத்தை தேடிப் போகிறார். ராய் லட்சுமியின் அழகில் மயங்கும் ஸ்ரீகாந்த், இறுதியில் அவரை ஏமாற்றி பணம் பறித்தாரா? ராய் லட்சுமியை உண்மையாக காதலித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீகாந்த், துறுதுறு நடிப்பால் ரசிகர்களைக் கவர்கிறார். கொள்ளையடிப்பது, ஏமாற்றுவது என்று கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். தன்னுடைய வழக்கமான ஸ்டைலில் இருந்து மாறுபட்ட நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

நாயகியாக வரும் ராய் லட்சுமி, அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார். புலிக்கு பயப்படும் காட்சியில் கவனிக்க வைத்திருக்கிறார். தேவ் கில், நைரா, வைஷ்ணவி சந்திர மேனன், த்விதா

பிளேக் பாண்டி ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.

பாலாவின் உதவி இயக்குனர் ஜே.பார்த்திபன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். அடுத்தடுத்து நடக்கும் காட்சிகளை யூகிக்கும் திரைக்கதை, தேவையில்லாத  புலிக் காட்சிகள் ஆகியவை படத்திற்கு பலவீனமாக அமைந்துள்ளன. வித்தியாசமான கதை என்றாலும் திரைக்கதையில் கவனம் செலுத்தி இருக்கலாம்.

எம்.வீ.பன்னீர்செல்வத்தின் ஒளிப்பதிவு கவனிக்க வைக்கிறது. அருள் தேவ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓரளவுக்கு ரசிக்க முடிகிறது.

மொத்தத்தில் ‘மிருகா’ சுவாரஸ்யம் குறைவு

விக்ரம் - சிம்பு படங்கள் ஒரே நாளில் வெளியிடப்படும் சாத்தியம்

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் சிம்புவும், விக்ரமும் நடித்த படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் படப்பிடிப்பு முடிந்ததும், பின்னணி வேலைகளை வேகமாக முடித்து, படத்தை ரமழான் பண்டிகையை ஒட்டி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

அதேபோல் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘கோப்ரா’ படத்தை அதே தினத்தில் வெளியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. கோப்ரா படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி உள்ளார். இதில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் இர்பான் பதான் வில்லனாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது.

விஜயகாந்தை சந்தித்து கண்ணீர் விட்டு கதறிய வடிவேலு; ஆறுதல் சொன்ன பிரேமலதா

நடிகர் வடிவேலு சமீபத்தில் விஜயகாந்தை சந்தித்து மன்னிப்பு கேட்டு கண்ணீர் விட்டு அழுததாக தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

வடிவேலு ராஜ்கிரணின் ‘என் ராசாவின் மனசிலே’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.இருந்த போதும் விஜயக்காந்த் மூலம் அதிக படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார் வடிவேலு.விஜயகாந்த் நடித்த பல படங்களில் வடிவேலுவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. நகைச்சுவை நடிகராக உச்சத்தில் இருந்தார் வடிவேலு. சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பலரும் வடிவேலுவின்

வடிவேலு அதிக படங்களைக் கொடுத்தார்.

இந்நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலின் போது விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்டது. அப்போது திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த வடிவேலு, விஜயகாந்தை தரம் தாழ்த்தி விமர்சித்தார்.

இதனால் சினிமாப் பிரபலங்கள் பலருமே வடிவேலு மீது அதிருப்தி அடைந்தனர். அந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று தேமுதிக பிரதான எதிர்க்கட்சியானது. அதன்பிறகு இயக்குநர்

ஷங்கருடன் ஏற்பட்ட பிரச்சினையால் வடிவேலுவுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது.

இதனால் கடந்த 10 ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார் வடிவேலு. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வடிவேலு, உங்களுக்கெல்லாம் ஒரு வருஷம்தான் லொக்டவுன், நான் 10 வருடமாக லொக்டவுனில் தான் இருக்கிறேன்.உடம்பில் நடிக்கத் தெம்பிருந்தும் வாய்ப்பில்லாமல் வீட்டில் முடங்கிக் கிடப்பது எவ்வளவு பெரிய வேதனை தெரியுமா என்று பேசி கண்ணீர் விட்டார். வடிவேலு கண்கலங்கிய

வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில் நடிகர் வடிவேலு குறித்த மேலும் ஒரு தகவல் வைரலாகி வருகிறது. அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் வடிவேலு, தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.அப்போது விஜயக்காந்திடம் கண்ணீர் விட்டு அழுது வடிவேலு மன்னிப்புக் கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தான் பேசியதெல்லாம் தவறுதான் என்று வடிவேலு கூறியதாகவும் கூறப்படுகிறது. அப்போது கேப்டன் ஒன்றும் நினைக்க மாட்டார் என பிரேமலதா அவருக்கு ஆறுதல் சொன்னதாகவும் கூறப்படுகிறது.

எஸ்.ஜே. சூர்யாவின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ டுவிட்டர் விமர்சனம்

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா, ரெஜினா கசான்ட்ரா, நந்திதா ஸ்வேதா உள்ளிட்டோர் நடித்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே வெளியாக வேண்டியது. ஆனால் பிரச்சினைகளில் சிக்கிவிட்டது. நெஞ்சம் மறப்பதில்லை படம் வெளியாகாதா என்று ரசிகர்கள் கவலையடைந்தனர்.அந்த நேரத்தில் தான் செல்வராகவனின் பிறந்தநாளான மார்ச் 5ஆம் திகதி நெஞ்சம் மறப்பதில்லை வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டனர். அந்த அறிவிப்பை பார்த்தே பிறகே செல்வா ரசிகர்கள் நிம்மதி அடைந்தார்கள்.இந்நிலையில் புது பிரச்சினை ஏற்பட்டு படத்தை திட்டமிட்டபடி வெளியீடு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. அதன் பிறகு

அந்தப் பிரச்சினையும் ஒரு வழியாக தீர்ந்து படம் இன்று வெற்றிகரமாக தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.படத்தைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் அது பற்றி ட்வீட் செய்கிறார்கள். படம் பற்றி ரசிகர்கள் கூறியிருப்பதாவது;

ப்ப்பா, எஸ்.ஜே. சூர்யா என்ன ஒரு அசத்தலான நடிப்பு, சான்ஸே இல்லை. செல்வராகவன் செல்வராகவன் தான். அவரின் அக்மார்க் படம் இது.

இந்தப் படத்தை போய் இத்தனை ஆண்டுகளாக பெட்டியில் வைத்திருந்திருக்கிறார்களே! செல்வராகவன் பிறந்தநாளுக்கு இதை விட சிறப்பான பரிசு வேறு எதுவும் இருக்காது.யுவன் ஷங்கர் ராஜாவின் இசை படத்துக்கு பக்கபலம். செல்வராகவன் படம் என்றாலே யுவன் தனி மூடுக்கு சென்றுவிடுவார் போன்று. அதிகாலை 5 மணி காட்சியைக் காண தியேட்டரில் ஒரே கூட்டம். ஹவுஸ்ஃபுல்லாகிவிட்டது

இந்தப் படம் நன்றாக இருக்கிறது என்று சொல்லக் கூடாது. வேற லெவலில் இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். அண்மைக் காலத்தில் பார்த்த சிறந்த படம் ஆகும். நன்றி செல்வராகவன்.

ரெஜினா கசான்ட்ராவின் நடிப்பு பாராட்டும்படி இருக்கிறது. கண்டிப்பாக பார்த்து ரசிக்கலாம், சிரிக்கலாம். கண்ணுங்களா செல்லங்களா பாடல் என்றும் நிலைத்து நிற்கும். அப்படி ஒரு பாடலை வைக்க வேண்டும் என்று செல்வராகவனுக்கு மட்டும் தான் தோன்றும் என்று தெரிவித்துள்ளனர்

அடுத்தடுத்து வெளிவரவுள்ள விஜய் சேதுபதியின் 4 படங்கள்

நடிகர் விஜய் சேதுபதி தற்போது இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராகி விட்டார். ஏனெனில் இவர் கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு மொழிப் படங்களில் நடித்து வருகிறார். தமிழிலும் இவர் நடிப்பில் ஏராளமான படங்கள் உருவாகி வருகின்றன. அதுமட்டுமின்றி சில படங்கள் வெளியீட்டுக்கும் காத்திருக்கின்றன.

அந்தவகையில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள லாபம், துக்ளக் தர்பார், மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர் ஆகிய நான்கு படங்கள் கோடையில் அடுத்தடுத்து வெளியாக உள்ளனவாம்.

இதுதவிர தமிழில் இவர் நடித்து வெற்றி பெற்ற ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களும் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட இருக்கின்றனஏற்கனவே இந்த ஆண்டில் விஜய் சேதுபதி நடிப்பில் மாஸ்டர், குட்டி ஸ்டோரி, உப்பென்னா ஆகிய மூன்று படங்கள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

ஹொலிவுட் படத்தின் படப்பிடிப்பில் தனுஷ்

தனுஷ், ‘தி க்ரே மேன்’ என்ற ஹொலிவுட் படத்தில் நடிக்கிறார். இதில் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் லா லா லேண்ட், பர்ஸ்ட்மேன் ஆகிய படங்களில் நாயகனாக நடித்த ரயன் காஸ்லிங் ஆகியோரும் நடிக்கின்றனர்இந்தப் படத்தை அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர் உள்ளிட்ட படங்களை இயக்கிய அந்தோனி, ஜோ ரூஸோ ஆகியோர் இயக்குகின்றனர்ஹொலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு தனுஷ் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். சமீபத்தில் சென்னை போயஸ் கார்டனில் கட்டும் தனது புதிய வீட்டுக்கு பூமி பூஜை போட்டு விட்டு ஹொலிவுட் படத்தில் நடிப்பதற்காக தனுஷ் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கு படப்பிடிப்புக்கு முந்தைய பணிகளில் பங்கேற்று வந்தார். தற்போது படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. ஹொலிவுட் நடிகர்களுடன் இணைந்து தனுஷ் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. தொடர்ச்சியாக 3

மாதங்கள் படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.

படத்தில் ஒரு கொலைக் கும்பலின் தலைவனாக தனுஷ் நடிப்பதாக கூறப்படுகிறது.

ஹர்பஜனின் முதல் தமிழ் பட டீசர் வெளியானது

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தமிழ்ப் படம் ஒன்றில் நடித்து வந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் போது, இவர் தமிழின் மீது வைத்திருந்த அளப்பரிய அன்பைப் பற்றி தான் நம் அனைவருக்கும் தெரியுமே. இந்நிலையில் தமிழ்ப் படம் ஒன்றில் அறிமுகமாகி அனைவருக்கும் ‘ஆச்சரியம்’ கொடுத்தார் என்று தான் கூற வேண்டும்.ஜான் பால் மற்றும் ஷாம், சூர்யா ஆகியோர் இந்தப் படத்தை இயக்க, அர்ஜுன், லொஸ்லியா உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். ஃப்ரெண்ட்ஷிப்

என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தின் டீசர் அண்மையில் வெளியிடப்பட்டது.

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், வெள்ளை வேஷ்டி என்று முழுக்க முழுக்க தமிழ் பையனாகவே மாறி இருக்கிறார் ஹர்பஜன் சிங். இந்தத் திரைப்பட டீசருக்கு சக விளையாட்டு பிரபலங்களிடம் இருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறார் ஹர்பஜன் சிங்.

காதலர் தினத்திற்காக கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய ஷாலு ஷம்மு – வைரலாகும் புகைப்படங்கள்

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான ஷாலு ஷம்மு, காதலர் தினத்திற்காக படு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி உள்ளார்.கோலிவுட்டின் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஷாலு ஷம்மு. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘திருட்டுப்பயலே 2’, ‘மிஸ்டர் லோக்கல்’ ‘இரண்டாம் குத்து’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் ஷாலு ஷம்மு, தற்போது மேலும் சில படங்களிலும் நடித்து வருகிறார்.சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ஷாலு ஷம்மு, அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்தவகையில், இன்று காதலர் தினத்தை முன்னிட்டு, படு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

 

கைது செய்யப்பட்டுள்ள சித்ராவின் கணவர் ஹேம்நாத் பரபரப்பு வாக்குமூலம்

 

விபத்து ஏற்படுத்திய சினேகன் – போலீசார் வழக்கு பதிவு

பிரபல பாடலாசிரியரும், மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்தவருமான சினேகன் ஏற்படுத்திய விபத்து காரணமாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.

தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். இவர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு நடிகர் கமல் கட்சி ஆரம்பித்தவுடன் அவரது கட்சியில் இணைந்த சினேகன், முக்கிய பொறுப்பில் பணியாற்றி வருகிறார்.
 
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் சவேரியாபுரம் மற்றும் திருமயத்துக்கு இடையே சினேகன் சென்ற கார், மோட்டார் சைக்கிளில் வந்த அருண் பாண்டி என்ற இளைஞர் மேல் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அருண் பாண்டி கீழே விழுந்து படுகாயமடைந்தார்இதையடுத்து அவர் திருச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இந்த விபத்து தொடர்பாக திருமயம் போலீசார் சினேகன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு விசாரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.. 
 

 

தவசியின் உடல்நலம் குறித்து விசாரித்தார் ரஜினிகாந்த்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் தவசி, சிகிச்சைக்கு போதிய பணமின்றி தவித்து வருவதாகவும் தனக்கு உதவுமாறும் அவர் வேண்டுகோள் விடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து அவருக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். நடிகர்கள் சூரி, சிவகார்த்திகேயன் ஆகியோர் நிதியுதவி அளித்தனர். இவர்களை தொடர்ந்து நடிகர்கள் விஜய் சேதுபதி, சௌந்தர ராஜா ஆகியோர் பணவுதவி செய்தனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், சிகிச்சை பெற்று வரும் தவசி அவர்களிடம் தொலைபேசி மூலம் பேசினார். மேலும் தற்பொழுது மேற்கொண்டுவரும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

புதிய அவதாரம் எடுத்த வரலட்சுமி சரத்குமார் – ஆச்சர்யத்தில் ரசிகர்கள்

நடிப்பில் தனக்கென்று தனி முத்திரை பதித்த வரலட்சுமி சரத்குமார், “கண்ணாமூச்சி” படம் மூலம் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் விஜய் நடித்து மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை புரிந்த படம் ” மெர்சல்”. இது இந்த நிறுவனம் தயாரித்த 100வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் அடுத்ததாக “கண்ணாமூச்சி” என்ற படத்தை தயாரிக்கிறது.பல சவாலான வேடங்களை ஏற்று தனக்கென்று நடிப்பில் தனி முத்திரை பதித்த வரலட்சுமி சரத்குமார், இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த நிறுவனம் அறிமுகம் செய்யும் முதல் பெண் இயக்குனரும் இவர் தான். ” கண்ணாமூச்சி” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அரசியல் மற்றும் திரையுலகை சார்ந்த 50 பெண் பிரபலங்கள் ஒரே சமயத்தில் வெளியிட்டுள்ளனர்.  

விஜய்சேதுபதி ஜோடியாக மணிரத்னம் பட நாயகி: டைட்டில் அறிவிப்பு

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது தமிழில் கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களில் நடித்து வரும் நிலையில் மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் அவர் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் டைட்டில் தற்போது ’19 (1)(a)’ என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல மலையாள இயக்குனர் இந்து எனப்வர் இயக்கவிருக்கும் இந்த படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நித்யாமேனன் நடிக்கவுள்ளார். இவர் மணிரத்னம் இயக்கிய ‘ஓகே கண்மணி’ உள்பட பல தமிழ், மலையாள திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்சேதுபதி, நித்யாமேனனுடன் இந்திரஜித் சுகுமரன், இந்திரன்ஸ் உள்பட பலர் இந்த படத்தில் இணைந்து நடிக்கின்றனர் என்பதும் இந்த படத்தை ஆண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே விஜய் சேதுபதியின் ‘96’ உள்பட ஒரு சில படங்களுக்கு இசையமைத்துள்ள கோவிந்த் வசந்தா’ இந்த படத்திற்கும் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் அடுத்த ஆண்டு இந்த படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

கமல் கட்சியில் இணைந்த மோடியின் டுவிட்டர் கணக்கை நிர்வகித்த பெண்!

பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கை ஒரே ஒரு நாள் மட்டும் நிர்வகித்த பெண் இன்று கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட்ட போது தமிழகத்தைச் சேர்ந்த சினேகா மோகன் தாஸ் என்பவர் பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கை ஒரு நாள் மட்டும் நிர்வகிக்க நியமனம் செய்யப்பட்டார். இந்த செய்தி இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆதரவற்றவர்களுக்காக ‘ஃபுட் பேங்க் இந்தியா’ என்ற அமைப்பை நடத்தி வரும் சினேகா மோகன்தாஸ் தற்போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டதாக அறிவித்துள்ளார்.கமல் கட்சியில் சேர்ந்த இவருக்கு சென்னை மண்டல மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சினேகா மோகன்தாஸ் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: என்னை ஒரு நல்ல தலைவராக தேர்ந்தெடுத்து நம்புவதற்கும், மக்கள் நீதி மய்யத்தின் துணை மாநில செயலாளர் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி சென்னை மண்டலத்திற்கு நியமித்த மரியாதைக்குரிய தலைவர் & நம்மவர் உயர்திரு டாக்டர் கமல்ஹாசன் அவர்களுக்கு நன்றி .

கவர்ச்சியில் எல்லை மீறிய சிருஷ்டி டங்கே.. ரசிகர்களை திணறடிக்கும் கண்ணக்குழி அழகி!

தமிழ் சினிமாவில் ‘மேகா’ படத்தின் மூலம் கண்ணக்குழி அழகி ரசிகர்களின் மனதில் இடம் பெற்றவர் நடிகை சிருஷ்டி டங்கே.மேலும் இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.இருப்பினும் அவரால் முன்னணி கதாநாயகியாக மாற முடியவில்லை.  எனவே அதற்காகவே தனது பட வாய்ப்புகளை அதிகப்படுத்துவதற்கு கவர்ச்சி தூக்கலான புகைப்படத்தை சமூக வலைதளங்களில் தெறிக்கவிடுவார் நடிகை சிருஷ்டி டங்கே.

மேலும்  சமூக வலைதளங்களில் இவருடைய புகைப்படத்தை பார்த்து ஜொள்ளுவிடுவதற்கு என்றே, இணையத்தில்  தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

அதற்கேற்றார்போல், தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தொடை தெரியும்படி கவர்ச்சியாக ஆடை அணிந்துள்ளார்.மேலும் நடிகை சிருஷ்டி டங்கே உடைய, இந்த புகைப்படமானது அவருடைய  ரசிகர்களின் மத்தியில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் தவசி, சிகிச்சைக்கு போதிய பணமின்றி தவித்து வருவதாகவும் தனக்கு உதவுமாறும் அவர் வேண்டுகோள் விடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து அவருக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். நடிகர்கள் சூரி, சிவகார்த்திகேயன் ஆகியோர் நிதியுதவி அளித்தனர். இவர்களை தொடர்ந்து நடிகர்கள் விஜய் சேதுபதி, சௌந்தர ராஜா ஆகியோர் பணவுதவி செய்தனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், சிகிச்சை பெற்று வரும் தவசி அவர்களிடம் தொலைபேசி மூலம் பேசினார். மேலும் தற்பொழுது மேற்கொண்டுவரும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.