மார்ச் 5ஆம் திகதிக்குப் பின் மின் வெட்டு இல்லை – நிதியமைச்சர்

மார்ச் 5ஆம் திகதியுடன் மின்வெட்டு நிறுத்தப்படும் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று (28) அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மின்வெட்டு மற்றும் எரிபொருள் நெருக்கடி தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. போக்குவரத்து மற்றும் எரிபொருள்…

தடுப்பூசி அட்டை இருந்தாலே கச்சதீவு உற்சவத்துக்குச் செல்லலாம்

கச்சதீவு உற்சவத்தில் கலந்து கொள்வோர் கொரோனா தடுப்பூசி அட்டைகள் வைத்திருக்க வேண்டியது அவசியம் எனவும் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள் மாத்திரம் கலந்துகொள்ளும் நிலையில் ஆலய வளாகத்தினுள் எவ்விதமான வர்த்தக நட வடிக்கைகளிலும் ஈடுபட முடியாது எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டது. கச்சதீவு புனித அந்தோனியார்…

இலங்கையில் கொரோனா தொற்றால் மேலும் 32 பேர் பலி

இலங்கையில் நேற்று முன்தினம் கொரோனா தொற்றால் மேலும் 32 பேர் உயிரிழந்தனர் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.   இவ்வாறு உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கு உட்பட்ட இரு பெண்களும் 30-59 வயதுக்கு இடைப்பட்ட 5 ஆண்களும்,  பெண் ஒருவருமாக 6…

டீசல் தட்டுப்பாட்டால்  எரிவாயு விநியோகத்திலும் பாதிப்பு

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிவாயு விநியோகம் தடைப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். லிட்ரோ நிறுவனம், விநியோகஸ்தர்களுக்கு குறைந்தளவிலான எரிவாயு சிலிண்டர்களை மட்டுமே வழங்குவதாகவும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிவாயுவை விநியோகிக்க முடியாதுள்ளதாக எரிவாயு நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர். மேலும்,…

திரிபோஷாவும் இல்லை: குடும்ப சுகாதார சேவைகள் பணியகம்

சிசுக்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்குவதற்கு சுகாதார அமைச்சின் களஞ்சிய சாலைகளில் தற்போது திரிபோஷா இல்லை என குடும்ப சுகாதார சேவைகள் பணியகத்தின் பணிப்பாளர் மருத்துவர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.எனவே, கிளினிக்குகளுக்கு வரும் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு திரிபோஷா…

மருந்து தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியம்

இலங்கை மத்திய வங்கி மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக மாதாந்தம் 25 மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்தத் தவறினால் மருந்து இறக்குமதி நிறுத்தப்படுமென மருந்து இறக்குமதியாளர்கள் சபை எச்சரித்துள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுடன் இந்த டொலர்களை பெற்றுக் கொள்ளுமாறு…

இலங்கையில் 4000 உக்ரேனியர்கள் ; விசா காலத்தை நீடிக்க நடவடிக்கைகள்

சுமார் 4,000 உக்ரேனிய சுற்றுலாப் பயணிகள் தற்போது இலங்கையில் தங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்கள் 30 நாட்களாக நாட்டில் இருந்ததாக அமைச்சு தெரிவித்துள்ளது. சுற்றுலா விசா இன்னும் 30 நாட்களில் காலாவதியாகி விடும். எனினும், உக்ரேனில் நிலவும் மோதல் காரணமாக…

திங்கட்கிழமை முதல் அதிக மின்வெட்டு – ஜனக ரத்நாயக்க

நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரு தினங்களிலும் இரவில் மின்வெட்டு இருக்காது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், திங்கட்கிழமை முதல் மின்வெட்டு தீவிரமடையவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள…

அத்தியாவசிய உணவுப் பொருள் கொள்கலன்கள் 2500 துறைமுகத்தில் தேக்கம்

அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய  2500 கொள்கலன்கள் துறைமுகத்தில் இன்னமும் சிக்கியுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.   டொலர் தட்டுப்பாடு காரணமாக பருப்பு, சீனி, செத்தல் மிளகாய் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் துறைமுகத்தில் தேங்கிக்…

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் காய்கறிகளின் விலை வீழ்ச்சி

காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருவதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வியாபாரிகள் காய்கறிகளைக் கொள்வனவு செய்ய வராததால், அவற்றின் விலைகள் குறைந்துள்ளன. மொத்தமாக காய்கறிகளை கொள்வனவு செய்ய வரும் வர்த்தகர்களின் எண்ணிக்கை வீழ்ச்சிய டைந்தமையே…