நாட்டை முழு அளவில் முடக்காது கொரோனா வைரஸ் பரவலை ஒருபோதும் கட்டுப்படுத்த இயலாது” – அரசுக்கு ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தல் !

நாட்டை முழு அளவில் முடக்காது கொரோனா வைரஸ் பரவலை ஒருபோதும் கட்டுப்படுத்த இயலாது”  என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“பி.சி.ஆர். பரிசோதனைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு வலியுறுத்தினேன். ஆனால், நோயாளிகள் இல்லை என முழு அளவில் பரிசோதனைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டன. குறிப்பிட்ட சில வைத்தியசாலைகளில் மாத்திரம் சந்தேகத்துக்கிடமான நோயாளிகளுக்குப் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. ஆனால், தற்போது நிலைமை பாரியளவில் மோசமடைந்துள்ளது.

கொரோனா வைரஸுக்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுப்பிடிக்கப்படாத நிலையில் சுகாதார அமைச்சு இதனை விட அவதானமாக இருந்திருக்க வேண்டும். இனி நாட்டை முழு அளவில் முடக்காது வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இயலாது. குறைந்தது இரு வார காலமேனும் நாட்டை முழு அளவில் முடக்க வேண்டும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *