பிரான்ஸ் பிரதமருக்கு கொரோனா பாதிப்பு

பிரான்ஸ் பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஐரோப்பா முழுவதும் கொரோனோவின் நான்காம் அலை பரவி வரும் நிலையில் பிரான்ஸில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. பிரான்ஸ் நாட்டின் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ். 56…

பல்கேரியாவில் அதிவிரைவு பஸ் தீ விபத்து; 45 பேர் பலி

பல்கேரிய நாட்டில் நெடுஞ்சாலையில் பயணித்த பஸ் ஒன்று தீப்பிடித்ததில் அதிலிருந்த குழந்தைகள் உட்பட குறைந்தது 45 பேர் பலியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேலும் ஒருவர் தீ விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறியவருகிறது. ——————— Reported by : Sisil.L

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் கனடாவில் நடாத்தப்பட்ட நவம்பர் 21-தமிழீழத் தேசியக் கொடி நாள் நிகழ்வுகள்

1990 ஆம் ஆண்டு இரண்டாவது மாவீரர் நாளையொட்டி நமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் இதே நாளில் தமிழீழத் தேசியக் கொடி பிரகடனம் செய்யப்பட்டதை மனதில் நிறுத்தி அத் தேசியக் கொடியை அதற்குரிய அனைத்து மரியாதைகளோடும் போற்றிக் கொண்டாடும் வகையில்,…

அவுஸ்திரேலியா செல்லவிருப்போருக்கான நற்செய்தி

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட விசாவை வைத்திருப்பவர்கள் டிசம்பர் 1 முதல் அவுஸ்திரேலியா செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்கொட் மொரிசன், சர்வதேச பயணத்தை மறு தொடக்கம் செய்வதற்கும் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் கட்டுப்பாடுகளைத் தளர்த்துகின்ற…

ஆந்திராவில் கன மழை ; திருப்பதி கோவில் வெள்ளத்தில் மூழ்கியது; 17 பேர் பலி

இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக 17 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.நகரின் அனைத்து வீதிகளும், குறிப்பாக திருப்பதி கோவில், வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், ஏராளமான பக்தர்கள் அங்கு சிக்கித் தவிப்பதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.…

லண்டன் தீ விபத்தில் இலங்கை தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி

லண்டனின் தென்கிழக்குப் பகுதியில் வீடு தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட இலங்கை தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர். லண்டனில் தென்கிழக்கில் உள்ள Hamilton Road in Bexleyheath பகுதியில் வீடொன்றில் தீப்பிடித்த சம்பவத்திலேயே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.…

கிறிஸ்மஸ் தீவில் நண்டுகளுக்காக வீதி மூடப்பட்டது

மேற்கு அவுஸ்திரேலியாவில் வருடத்துக்கு ஒரு முறை இந்தச் சிவப்பு நண்டுகள் காணப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மில்லியன் கணக்கான சிவப்பு நண்டுகள் ஆண்டுதோறும் இடம்பெயர்ந்து வரும் நிலையில், கிறிஸ்மஸ் தீவிலுள்ள வீதிகளை மூடி நண்டுகளைப் பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.…

உலக பணக்கார நாடுகள் பட்டியலில் சீனா முதலிடம்

உலகின் பொருளாதார வளம் நிறைந்த நாடுகளின் பட்டியலை மெக்கன்சி அண்ட் கோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் உலகின் மொத்த சொத்து மதிப்பு கடந்த 20 ஆண்டுகளில் மூன்று மடங்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது.உலகின் மொத்த சொத்து மதிப்பு 2000ஆம் ஆண்டு 156 லட்சம்…

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் – ஜனாதிபதி ஜோ பைடன் காணொலி சந்திப்பு

பொருளாதார வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே இணக்கமான உறவு இல்லை. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இரு தரப்பிலும் மோதல் போக்கு நிலவி வருகிறது. வர்த்தகப் போர், கொரோனா பரவல் விவகாரம், தற்போது தாய்வானுக்கு சீனா போர் விமானங்களை அனுப்பியது என…

கொரோனா சிவப்பு பட்டியலிலிருந்து இலங்கை உட்பட 16 நாடுகளை பஹ்ரைன் நீக்கியது

கொரோனா சிவப்பு பட்டியலிலிருந்து இலங்கை உள்ளிட்ட சில நாடுகளை பஹ்ரைன் நீக்கியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கை உள்ளிட்ட 16 நாடுகளை பஹ்ரைன் சிவப்பு பட்டியலில் உள்ளடக்கியிருந்தது. இந்த நிலையில் நாளை 14ஆம் திகதி முதல் இலங்கை உள்ளிட்ட சில நாடுகள்…