கட்டட வேலையில் ஈடுபட்டபோது, மேல்தளத்திலிருந்து தவறி வீழ்ந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.நீர்வேலியில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டைச் சேர்ந்த நவரத்தினம் அன்ரன் ஜெயராஜா (வயது-36 ) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தார்.வீட்டுக் கட்டிடத்தின் மேல் தளத்தில்…
Category: SRI LANKA 1
அநாதை இல்லத்தில் சிறுவர்கள் உட்பட 15 பேருக்கு கொவிட் தொற்று
அநாதை இல்லமொன்றில் 12 சிறுவர்கள் மற்றும் 3 பணியாளர்கள் உட்பட 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பத்தேக சுகாதார மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். அக்குரஸ்ஸ பிரதேச பணியாளர் ஒருவர் அண்மையில் தொற்றுக்காளானார். அதன்பின் அவருடன் தொடர்புடைய 2 ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர்.…
மக்களின் அதிகரித்த நடமாட்டத்தால் பயணக்கட்டுப்பாடுகள் நீடிக்கப்படலாம்: வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன
நாட்டில் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படா விட்டால் பயணக் கட்டுப்பாடுகளை மேலும் நீடிக்க வேண்டி ஏற்படலாம் என்று இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுர் பத்மா குணரத்ன தெரிவித்தார். சமூகத்தில், மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், அமுலில் உள்ள கட்டுப்பாடுகள் முறையாக…
நிலைமையைக் கட்டுப்படுத்த இன்னும் 3 வாரங்கள் செல்லும் : இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி
இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துள்ள போதிலும், உறுதிப்படுத்தப்படும் தொற்றாளர்களின் நாளாந்த எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது. எனவே, நாட்டில் தற்போதுள்ள கொரோனாத் தொற்று நிலைமையைக் கட்டுப்படுத்த இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் செல்லும்.” – இவ்வாறு சுகாதார சேவைகள்…
2 வயது குழந்தைகள் உட்பட வடக்கில் 42 தொற்றாளர்கள்!
கரவெட்டியில் 2 வயது குழந்தைகள் இருவர், முல்லைத்தீவில் 2 வயது குழந்தை ஒன்றுமாக நேற்று வடக்கு மாகாணத்தில் நேற்று 42 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.இவ்வாறு அடையாளம் கணப்பட்டவர்களில் 41 பேர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.யாழ்.போதனா வைத்தியசாலை, யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடங்களின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள்…
முல்லைத்தீவில் குண்டு வெடிப்பு; பெண்ணொருவர் படுகாயம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைப்பாலை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் வயோதிபப் பெண் ணொருவர் படுகாயமடைந்துள்ளார். அவர் புதுக்குடி யிருப்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். காணியில் இருந்த குப்பைகளைக் கூட்டி நெருப்பு வைத்தபோது அதிலிருந்த குண்டு வெடித்ததில்…
யாழ்.போதனா வைத்தியசாலையிகொரோனாவால் நேற்று ஐவர் பலி!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொவிட்-19 நோயாளிகள் ஐவர் நேற்று இரவு 9 மணி வரையான 24 மணி நேரத்தில் உயிரிழந்தனர் என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நால்வரும் திருகோணமலை புல்மோட்டையைச் சேர்ந்த ஒருவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…
பாண் தவிர்ந்த அனைத்து பேக்கரி பண்டங்களின் விலைகள் அதிகரிப்பு
பாண் தவிர்ந்த அனைத்து பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பேக்கரி உரிமையாளர்கள் விலையை அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்தார். இதன்படி மாலு…
வவுனியாவில் சுகாதார நடைமுறைகளை மீறி திருமணம்; மணமக்கள் உட்பட பலர் தனிமைப்படுத்தலில்
வவுனியா-தவசிகுளம் பகுதியில் சுகாதார நடைமுறைகளை மீறி திருமண நிகழ்வு இடம்பெற்றமையால் மணமக்கள் உட்பட அவர்களின் வீட்டார் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.வவுனியா தவசிகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பாலவிநாயகர் 3 ஆம் ஒழுங்கை வீதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றை 15 உறவினர்கள்…
தொற்றாளர்களின் அளவின் அடிப்படையில் பயணக் கட்டுப்பாடுகள் குறித்த முடிவு : மருத்துவர் அசேல குணவர்தன
இவ்வாரம் அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படுமா என்பது குறித்து அடுத்த வாரம் முடிவு செய்யப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன தெரிவித்தார்.அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாடுகளின் பெறுபேறுகள் ஒன்று அல்லது இரண்டு…