வவுனியா முதியோர் இல்லத்தில் 50 பேருக்கு கொரோனா; மூவர் உயிரிழப்பு

வவுனியாவிலுள்ள முதியோர் காப்பகம் ஒன்றில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அந்தக் காப்பகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூவர் மரணமடைந்துள்ளனர் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

 
வவுனியா, பம்பைமடுப் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தைச் சேர்ந்த இருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்றால் மரணமடைந்த நிலையில், நேற்றும் ஒருவர் மரணமடைந்தார். அத்துடன் குறித்த காப்பகத்தில் இருப்போரிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
———–
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *