யாழ். மாவட்டத்தின் நடப்பு ஆண்டுக்கான முதலாவது அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

2024 ஆம் ஆண்டுக்கான முதலாவது யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம், யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று (16) நடைபெற்றது.

இக் கூட்டத் தொடரில் குறிப்பாக நடப்பு ஆண்டுக்காக மாவட்டத்தில் இவ்வாண்டு பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் ஊடாக யாழ். மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலக பிரிவின் ஊடாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள 838  அபிவிருத்தி திட்டங்களுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் அனுமதியை பெறும் முகமாகவே இந்த கூட்டத்தொடர்   இடம்பெற்றது.

விசேடமாக இன்றைய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் கலந்து கொண்டதுடன் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப் படவுள்ள குடிநீர்த் திட்டத்தின் தொடர்பில் தனது  கருத்துக்களை முன்வைத்ததுடன் அதற்கான தெளிவுபடுத்தல்களையும் வழங்கினார்

Reported by:S.Kumara

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *