பதுளையில் தலைகீழாகக் கவிழ்ந்த பஸ்; பெண் பலி, 26 பேர் காயம்

பதுளை – கந்தகெட்டிய, மீகஹகிவுல யோத உல்பத்த பகுதியில் பஸ்ஸொன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 26 பேர் காயமடைந்துள்ளனர். 

மீகஹகிவுல பகுதியிலிருந்து கெட்டவத்த வரை பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றே விபத்திற்குள்ளாகியுள்ளது

இன்று (20) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்தில் காயமடைந்தவர்கள் மீகஹகிவுல மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Reported by :S.Kumara

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *