நல்லூர் உண்ணா விரதப் போராட்டத்துக்கு அதிகரிக்கும் மக்கள் ஆதரவு

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தல் உள்ளிட்ட

நான்கு கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானியாவில் திருமதி அம்பிகை செல்வ

குமார் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கிறார்.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக நல்லூர் ஆதீன முன்றிலில் கடந்த ஞாயிறன்று

சுழற்சி முறை உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர்கள், மதத் தலைவர்கள் தலைமையில்  ஆரம்பமானது.

அரசியல் கட்சிகளும் இந்தப் போராட்டத்துக்கு தமது ஆதரவை

முதல் நாளில் வெளிப்படுத்தியிருந்தன.

இரண்டாம் நாளான நேற்றுத் திங்கட்கிழமை ஏராளமான பொது

மக்கள் பங்கேற்றனர். மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள்,

சிறுவர்கள் எனப் பல தரப்பினரும் நேற்றைய  போராட்டத்தில்

பங்கேற்றனர்.

இன்று செவ்வாய்க்கிழமையும் போராட்டம் தொடரும் என்றும் அறிவிக்கப்பட் டுள்

ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *