நடிகை ‘நல்லெண்ணெய் சித்ரா’ காலமானார்

பிரபல நடிகையான நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் காலமானார். தமிழ் சினிமாவில் 80-களின் காலகட்டத்தில் புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்தவர் சித்ரா. இவர் சரத்குமார் நடிப்பில் வெளியான ‘சேரன் பாண்டியன்’ படத்தில் தங்கையாக நடித்த பிறகு மிகவும் பிரபலமானார்.

 இவர் ஒரு நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்ததை அடுத்து, நல்லெண்ணெய் சித்ராவாகவே கோலிவுட்டில் அடையாளப்படுத்தப்பட்டார். சித்ரா தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து சினிமா, சீரியல்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில், சென்னையில் கணவர் மற்றும் மகளுடன் வசித்து வந்த சித்ரா இன்று மாரடைப்பால் திடீரென மரணம் அடைந்திருக்கிறார். சித்ராவின் திடீர் மரணத்தால் திரையுலகத்தினர், ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
———————-

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *