ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க நிச்சயம் போட்டியிடுவார்: ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிச்சயம் போட்டியிடுவார் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். 

சுற்றுலாத்துறை அமைச்சில் இன்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். 

அடுத்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவாரா, இல்லையா என்பது தொடர்பில் மக்களிடையே சந்தேகமுள்ளது என குறிப்பிட்ட ஹரின் பெர்னாண்டோ, அவர் கட்டாயமாக போட்டியிடுவார் என உறுதியாகக் கூறினார். 

”பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிக்காததால், எதிர்க்கட்சியே வெல்லும் என அனைவரும் இலகுவாக கூற முடியும், ஆனால், எதிர்க்கட்சி இரண்டாக பிரிந்ததும், ரணில் விக்ரமசிங்க இலகுவாக வெற்றியடைவார். முன்பு இருந்தவாறு எதிர்க்கட்சி தற்போது இல்லை. எதிர்க்கட்சியினரின் பலவீனத்தினால் இன்று மக்கள் விடுதலை முன்னணி, முன்னணியில் உள்ளது. இதனால் சஜித்திற்கும் அநுரகுமாரவிற்கும் வாக்குகள் பிரிந்து செல்லும் பட்சத்தில், எமது நபர் இலகுவாக வெற்றியீட்டுவார்,” என ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். 

Reported by:S.Kumara

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *