இலங்கையில் எரிபொருள் விலை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இலங்கையில் எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக என்பதை பொறுப்புடன் தெரிவிப்பதாக தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் (2022) ஜனவரி மாதம் 4ஆம் திகதியாகும்போது, மசகு எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்படும். மேலும், இதனால் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூட வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் எரிபொருளின் விலை மேலும் அதிகரிக்கப்படலாம்.

மேலும், உலக சந்தையில் டொலர் 15ஆல் எரிபொருள் விலை வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையிலேயே, எமது நாட்டில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *