மத்திய வங்கி ஆளுநர்  ஜனாதிபதிக்கு காலக்கெடு

நாட்டில் தற்போது நிலவும் அரசியல் ஸ்திரமற்ற தன்மையை உடனடியாக தீர்க்காவிட்டால் நாடு மேலும் பொருளாதார பாதாளத்துக்கு தள்ளப்படுவதை தவிர்க்க முடியாது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். மத்திய வங்கி வளாகத்தில் இன்று (11) ஊடகங்களுக்கு கருத்து…

திருமலை கடற்படை தளத்தில் மஹிந்த பாதுகாப்பாக உள்ளார் – கடற்படைத் தளபதி

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் திருகோணமலை கடற்படை முகாமில் பாதுகாப்பாக இருப்பதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன இன்று (11) தெரிவித்தார்.   நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து பத்தரமுல்லையிலுள்ள பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற…

திருகோணமலை கடற்படை முகாமை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்!

திருகோணமலையில் உள்ள கடற்படை முகாமை முற்றுகையிட்டு தற்போது பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்பத்தினர் திருகோணமலை கடற்படை தளத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் அங்கு கூடியுள்ளனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ———————  …

பொலிஸ் அதிகாரி உட்பட 08 பேர் நேற்றைய மோதல்களில் பலி ; 216 பேருக்கு காயம்

நாடளாவிய ரீதியில் நேற்று (09) இடம்பெற்ற மோதல்களில் இதுவரை 08 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   இறந்தவர்களில் ஒரு பொலிஸ் அதிகாரியும் அடங்குகிறார். கண்ணீர் புகைக் குண்டு வெடித்ததில் 28 வயது உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவர்  உயிரிழந்துள்ளார்.    வைத்தியசாலையில்…

கட்டுநாயக்க விமான நிலையப் பாதையில் போராட்டக்காரர்கள் ;வாகனங்கள் சோதனை

கட்டுநாயக்க விமான நிலையப் பகுதியில் போராட்டக்காரர்கள் குழுவொன்று சோதனைப் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரமுகர்கள் குழுவொன்று நாட்டை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படும் நிலையில் அவர்களது அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதற்காக போராட்டக்காரர்களும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் அனைத்து…

இலங்கையில் இராணுவ ஆட்சி அமுலாகும்  – சந்திரிகா எச்சரிக்கை!

தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் இராணுவ ஆட்சி அமுல்படுத்தப்படும் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எச்சரித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக கடந்த சில வாரங்களாக அலரி மாளிகைக்கு அருகாமையிலும், கொழும்பு காலிமுகத் திடலிலும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில்…

அலரி மாளிகையிலிருந்து வெளியேறினார் மஹிந்த

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் இருந்து வெளியேறியுள்ளார். இன்று(10) காலை முன்னாள் பிரதமர் அந்த இடத்தை விட்டு வெளியேறியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.———————– Reported by : Sisil.L

இராணுவத் தளபதி – பொலிஸ் மா அதிபர் மனித உரிமை ஆணைக்குழுவில் ஆஜராக அழைப்பு

எதிர்வரும் 12ஆம் திகதிவியாழன்) பொலிஸ் மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. கொழும்பு காலி முகத்திடலில் நேற்று (மே 09) இடம்பெற்ற மோதலின் போது சட்டத்தை முறையாக அமுல்படுத்தத் தவறியமைக்கான காரணத்தை…

பஞ்சிகாவத்தையில் எரியுண்ட பஸ்

கொழும்பு பஞ்சிகாவத்தை மருதானை வீதியில் மினி ரக பஸ் ஒன்று ஆர்ப்பாட்டக்காரர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ள காட்சி Reported by : Sisil.L

பிரதமர் மட்டுமல்ல, அரசாங்கமும் பதவி விலக வேண்டும் -ரணில் 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தற்போதைய மோதல் நிலைமை தொடர்பில் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார். கோத்தா கோ கிராமத்தின் மீதான தாக்குதலைக் கண்டித்து அவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். பிரதமர் மட்டுமன்றி அரசாங்கமும் பதவி விலக வேண்டும் எனவும்…