காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களை புதுப்பிக்க எதிர்காலத்தில் வேரஹெரா அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும், அது தொடர்பாகபஒரு மாதத்திற்குள் அவசர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஏற்கனவே முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனிதா கொடிதுவக்கு தெரிவித்தார்.
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வேரஹெரா கிளையில் நேற்று (25) கண்காணிப்பு சுற்றுப்பயணத்தில் பங்கேற்றபோது துணை அமைச்சர் இவ்வாறு கூறினார்.
சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெறும்போது போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தால் வழங்கப்படும் மருத்துவச் சான்றிதழ் அச்சிடப்பட்ட நகலாக வழங்கப்படுவதால் பல முறைகேடுகள் நடப்பதாகவும், எதிர்காலத்தில் சான்றிதழை ஒன்லைனில் வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

