சாந்தனை இலங்கைக்கு அனுப்புமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேண்டுகோள்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சாந்தனை இலங்கைக்கு அனுப்பிவைக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்டகாலம் சிறைத்தண்டனை அனுபவித்தவர்களை இந்திய உச்ச நீதிமன்றம் விடுதலை செய்திருந்தாலும் அவர்கள் சிறப்பு முகாமில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுகவீனம் காரணமாக உடல்நிலை மோசமடைந்துள்ள சாந்தனின் அவசர சூழ்நிலையை கருத்திற்கொண்டு இந்திய மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் இலங்கை அரசு ஆகியன உடனடியாக பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொண்டு அவரை இலங்கையிலுள்ள குடும்பத்தினருடன் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் வேண்கோள் விடுக்கப்பட்டுள்ளது

Reported  by:S.Kumara

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *