அனர்த்த அழிவின் மீள்கட்டுமான பணியில்உலகத்தமிழ்அமைப்புகளைஒன்றிணையுமாறுஅனைத்துலகத்தமிழர்பேரவை (FGT) அழைப்பு

இலங்கைத் தீவில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அவதி அடைந்து வருகின்றன. வீடுகள், வாழ்வாதாரம், அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் பாதிக்கப்பட்ட நிலையில், உலகத் தமிழர் சமூகத்தின் ஒருங்கிணைந்த மனிதாபிமான உதவி இந்நேரத்தில் மிக அவசியமாகியுள்ளது.

இதனை முன்னிட்டு, அனைத்துலகத் தமிழர் பேரவை (FGT) உலகம் முழுவதும் உள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புகள் அனைத்தையும் ஒற்றுமையுடன் இணைந்து வடகிழக்கு மற்றும் மலையக அனர்த்த அழிவின் மீள்கட்டுமான பணியில் செயல்படுமாறு அழைக்கிறது.

 FGT-யின் 7 பேர் கொண்ட பணிக்குழு அமைப்புஉதவித் திட்டங்களை திட்டமிட்டு பொறுப்புடன் செயல்படுத்த, FGT ஒரு 7 பேர் கொண்ட சிறப்பு பணிக்குழுவை அமைத்துள்ளது. இக்குழு கீழ்க்கண்ட பொறுப்புகளை ஏற்கும்:

களத்தில் உள்ள அவசரத் தேவைகளை மதிப்பாய்வு செய்தல் களத்தில் நம்பகமான கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படுதல்

  • நிதி மற்றும் வளங்களை ஒருங்கிணைத்தல்
  • உதவிப் பொருட்களை தெளிவான முறையில் விநியோகிக்கப்படுவதை கண்காணித்தல்
  • தமிழ்ப்புலம்பெயர் அமைப்புகள் மற்றும் பொதுமக்களுக்குக் சமகால  தகவல் வழங்குதல்

 

இக்குழு, FGT-யின்பொறுப்புடனும் கட்டுக்கோப்புடனும் பணிகளை மேற்கொள்ளும் என்ற உறுதியை வலியுறுத்துகிறது.

 

அமைப்புகள் ஒன்றிணைய வேண்டிய தருணம்

இது சாதாரண உதவி கேட்கும் தருணம் அல்லஇது தமிழர் ஒற்றுமை வெளிப்பட வேண்டிய வரலாற்றுப் பொழுது. நம் தாயகம் நம்மை நாடுகிறது. ஒன்றிணைந்து உதவினால் மட்டுமே மீட்பு வேகம் பெறும்.”

FGT அன்போடு அழைக்கிறது:

  • சமூக மற்றும் நல அமைப்புகள்
  • பண்பாட்டு மற்றும் மத அமைப்புகள்
  • மாணவர் & இளைஞர் அமைப்புகள்
  • தொழில்முறை மற்றும் வணிக வலைப்பின்னல்கள்
  • நன்கொடையாளர்கள் மற்றும் பொதுமக்கள்

 

உதவி வழங்க / இணைந்து செயல்பட தொடர்பு கொள்ள

மின்னஞ்சல்: communication@tamilfederation.org
தொலைபேசி: (416) 473-5348
இணையதளம்: www.tamilfederation.org


எல்லோரும் கை கோர்த்து, மனிதாபிமான முயற்சியில் இணைந்து செயல்பட வேண்டுகிறோம்.

நிமால் விநாயகமூர்த்தி,

தலைவர்,

அனைத்துலகத் தமிழர் பேரவை.