இலங்கையில் மேலும் 118 பேர் கொரோனாவால் பலி

கொரோனா தொற்றால் நாட்டில் மேலும் 118 பேர் உயிரிழந்துள்ளனர். இம்மரணங்கள் அனைத்தும் கடந்த 9ஆம் திகதி உறுதி செய்யப்பட்டவை என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 79 ஆண்களும் 39 பெண்களும் அடங்குகின்றனர்.

உயிரிழந்தவர்களில் 17 பேர் 30 மற்றும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்பதுடன், 101 பேர்  60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 5,340 ஆக அதிகரித்துள்ளது.
—————–

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *